search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை விபத்து மரணம்"

    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர்(வயது 20). கரும்புகடையை சேர்ந்தவர் செய்யது தவுபிக்(20). நண்பர்களான இவர்கள் இருவரும் கார் டிங்கரிங் வேலை செய்து வந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று இரவு பீளமேடு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பீளமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அபுதாகிர், தவுபிக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பலியான இருவரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#accident

    கோவை:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மதன் (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

    எனவே கோவை கணபதியில் உள்ள நண்பரின் அறையில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இவரை பார்ப்பதற்காக நண்பர் பிரனவ் என்பவர் நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் இரவு ஊருக்கு செல்வதாக கூறினார்.

    இதனையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக மதன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரத்துக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் சத்தி ரோடு கணபதி 3 நம்பர் பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மதன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரனவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் மத்திய போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #accident

    ×